புதன், 28 செப்டம்பர், 2011

நெளிந்து செல்லும் சாலைகள்

பயணத்தின் தாகம் 
தீராமல் 
சாலைகள் 
உதடுகளாய் 
உறிஞ்சுகின்றன  என்னை .

நாக்குகளாய் நெளியும் 
நெடுஞ்சாலைகளும் 
தெருக்களும் 
விழுங்க காத்திருகின்றன 
வெகுகாலமாய் 
வெயில் போர்த்தியும் 
நிலவில் குளித்தும் 
எனக்காய் .

பயமில்லை...
விருப்பத்துடனே
பயணத்தை 
ஆரம்பிக்கிறேன் 
ஓவ்வொரு முறையும் .  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக