பயணத்தின் தாகம்
தீராமல்
சாலைகள்
உதடுகளாய்
உறிஞ்சுகின்றன என்னை .
நாக்குகளாய் நெளியும்
நெடுஞ்சாலைகளும்
தெருக்களும்
விழுங்க காத்திருகின்றன
வெகுகாலமாய்
வெயில் போர்த்தியும்
நிலவில் குளித்தும்
எனக்காய் .
பயமில்லை...
விருப்பத்துடனே
பயணத்தை
ஆரம்பிக்கிறேன்
ஓவ்வொரு முறையும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக