ஞாயிறு, 31 ஜூலை, 2011


சனி, 30 ஜூலை, 2011

 சமசீர் கல்வி தேர்வுத்தாள் எப்படி இருக்க வேண்டும் .

சாம்பிள் :



1) மைசூர் போண்டா என்றவுடன் நினைவுக்கு வரும் ஊர் .
          அ) பெங்களூர்   ஆ) மைசூர்   இ ) வேலூர்  ஈ ) பாலூர் .


2) முடியும் -எதிர்பதம் என்ன என்பதை எழுத முடியுமா ?முடியாதா ?
       
          அ)முடியும்    ஆ) முடியாது .


3) திருநெல்வேலி அல்வா எந்த ஊரில் தயாரிக்கபடுகிறது ?


4) சமாதானப்பறவை பறவை எது ?
          அ) சிட்டுகுருவி   ஆ) காண்டாமிருகம் இ) புறா   ஈ )    ஈ



5) சிக்கன் பிரியாணி என்றவுடன் நினைவுக்கு வரும் பிராணி .
          அ) கோழி    ஆ)  மட்டன்  இ) மாடு


6) டாஸ்மாக் (TASMAC )  கடையில் விற்கப்படுவது எது /
           அ) நாட்டு சரக்கு   ஆ) சரக்கு  இ) லேகியம்  ஈ)  மருந்து .


7) புரட்சி தளபதி விஷால் நடித்து வெளிவந்த படம் 
           அ) இவன்-அவன் ஆ)அவன்-இவன்  இ) எவண்டா அவன் ஈ ) இவனாடா  அவன் .


8) கககபோ  -விரிவாக்கம் எழுதவும் .


9)மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எந்த ஊரில் உள்ளது ?
           அ)கன்னியாகுமரி  ஆ) கும்பகோணம் இ)மதுரை .

10)தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் ?
            அ) டாக்டர் .ஸ்ரீநிவாசன்  ஆ) சாம் ஆண்டெர்சன்  இ) ரஜினி ஈ) லூஸ் மோகன் .
            
11) கீழ் கண்டவற்றில் எது விஜய் நடித்த படம் ?
             அ) குருவி  ஆ) சிட்டு குருவி  இ)மைனா  ஈ) காக்கா .
             

12) புல் பாயில்-ஆப் பாயில்  இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை விளக்குக .

13)சிறு குறிப்பு வரைக : ஜில்பான்ஸ் 

14) தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் முதல் பணி .
              அ)எதிர் கட்சியினரை சிறையில் அடிப்பது .
              ஆ)மக்களுக்கு சேவை செய்வது .
              இ)மக்களை மறப்பது .

15) தேர்தலில் இலவசமாக தரப்பட்டது ..
              அ) காண்டாமிருகம்   ஆ)ஆடு  இ) யானை எ) கொரங்கு 

16) சரியா /தவறா ?கண்டறிக .
           திருக்குறளை எழுதியவர் பெயர் திருவள்ளுவர் எனில் ,மணிமேகலையை எழுதியவர்  பெயர்  மணி ஆகும் .
                 அ) சரி  ஆ) தவறு .

17) சிறுகுறிப்பு வரைக ;
             அ) ஜில் 
              ஆ)ஜங்
              இ) ஜக்

18) விரிவான கட்டுரை எழுதுக .(இரண்டிற்கு மட்டும்)
             அ) டாஸ்மாக் -ன்  சரக்குகளும் ,சிறப்புகளும் .
             ஆ) நமீதாவின்  திரைவுலக சேவையும் ,தொண்டும்
.
19)திருக்குறளில் உள்ள அதிகாரத்தை கண்டுபிடி .
               அ)அறத்துப்பால்  ஆ)ஆவின் பால்  இ) பாதாம் பால் ஈ) மசாலா பால் 

20) கோடிட்ட  இடத்தை நிரப்பு .
                --------------- கோயில்மணி ,கோயில்மணி நான் கேட்டேன் .
              அ)டிங்டாங்   ஆ) டண்டணக்கா  இ ) கலகல  

21) தமிழில் மொழி பெயர்க்கவும் :
             அ)   அப்பாடக்கர் 
             ஆ) அகா துகா.

இன்னும் கொஞ்ச நாளைக்கு புத்தகம் தராம ,பள்ளிக்கூடம் நடந்தா ,மேலே இருக்குற கேள்விக்கு கூட பசங்க கோனார் நோட்ஸ் வாங்கி தான் பிட் அடிக்கணும் .

வாழ்க சமசீர் கல்வி .....வாழ்க ஜனநாயகம் ...வாள்க தமில் ??