வியாழன், 22 செப்டம்பர், 2011

கல்

கல்லின் 
உள்ளே உறங்கும் 
புத்தனை 
காண முடிகிறது  எனக்கு .

இன்ன பிறரையும் 
அவ்வாறே ..

கல் மட்டுமே 
தெரிகிறது என்கிறாய் 
நீ .

அந்த சிலையை 
உடைத்து 
காண்பிக்கிறேன் ..
கல் 
என்கிறாய் 
மறுபடியும் ...

உள்ளே 
ஒரு ராமனோ 
ஒரு புத்தனோ 
உறங்கிக்கொண்டிருக்கலாம் 
என்பதை மறந்து .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக