கல்லின்
உள்ளே உறங்கும்
புத்தனை
காண முடிகிறது எனக்கு .
இன்ன பிறரையும்
அவ்வாறே ..
கல் மட்டுமே
தெரிகிறது என்கிறாய்
நீ .
அந்த சிலையை
உடைத்து
காண்பிக்கிறேன் ..
கல்
என்கிறாய்
மறுபடியும் ...
உள்ளே
ஒரு ராமனோ
ஒரு புத்தனோ
உறங்கிக்கொண்டிருக்கலாம்
என்பதை மறந்து .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக